Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஹாட் ஸ்பாட் ( Hot Spot )

 வழக்கமா தம்பி ஒருத்தன் எந்த படம் வந்தாலும் அத முதல் ஆளா பாத்துட்டு அதுல நல்ல படமா எனக்கு அனுப்பி வைப்பான். அண்ணா இத கண்டிப்பா பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க ன்னு சொன்ன படத்துல இந்த ஹாட்ஸ் பாட் ஒண்ணு.

படம் ஆரம்பம் முதல் இரண்டு நிமிடம் வழக்கமான கீரோ என்ட்ரி போல இருந்தாலும். கதை ரொம்பவே புதுசு ஆனால் படத்தோட லிங் ஆக மனசு மறுத்துச்சு. ஏதோ நமக்கு நடந்த மாதிரியே இருந்துச்சி.

ஒரு ஆணோட கழுத்தில தாலி அது நம்ம சம்பிரதாயம் இல்லைன்னாலமும் அது மனுசன் உருவாக்குன சடங்கு தான, ஆனால் துர்துஷ்டா வசமா இப்படி ஆகிற கூடாது. படத்திலயே ஏற்றுக் கொள்ள முடியல.

வேலைக்கு போக வேண்டாம் பையன் வீட்டோட இருந்தால் போதும். வீட்டு வேலை பாக்குற அப்பா என மனம் ஒவ்வாத கதைக்களம். புகுந்த வீட்டில் பையன் போய் தவிக்கும் தவிப்பு.



இதையே தான் ஒரு பெண் அனுபவிக்கிறாள் என்பது அது நமக்கு வரும் போது தான் புரிகிறது. படத்தில் கூட இப்படி ஒரு காட்சியை ஒரு ஆணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

படம் துவங்கி திருமண காட்சி முடிந்து மணமகன் விஜய் மணமகள் தனு வீட்டிற்குள் வந்ததும் ஒரு பாடல் வரும் வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம் அந்த பெண் குரல் காதுகளில் கணீர் என்று விழுகிறது.

இசையும் தான் அப்படியே ஒரு பொண்ணுக்கு என்ன என்ன மாமியார் வீட்டில நடக்குமோ அப்படியே, ஒரு பையனுக்கு மாமனார் வீட்டில நடக்கும் கடைசியா பொண்டாட்டி கையால புருஷன் ஒரு அடி வாங்கவும் தான் எல்லாம் கனவுன்னு காட்டுறாய்ங்க அப்புறம் தான் நமக்கு உசுரே வருது.

பட காட்சியை கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவு சமூகத்தோடு ஒன்றிவிட்டோம் என்று தோன்றவில்லை. பெண்ணடிமை யை பழகிவிட்டோம் என்று தான் தோன்றுகிறது.

வெறும் கனவு தான் அதன்பிறகு படம் மாறும் என்ற எண்ணம் வரும். மாறும் தான் ஆனால் இந்த முறை வழக்கம் போல மணமகள் டீ கொண்டு வருவாள். நாயகன் விஜய் கண்ட கனவு நம்மையே பாதிக்கும் போது அவனை பாதித்திருக்காதா என்ன அவன் அனைவரும் பேசும் முன்பு அவனது பேச்சை துவங்குவான்.

தனது மாமியாரிடமிருந்து “ஆன்டி பயப்படாம சொல்லுங்க நீங்க உங்க வீட்டை எவ்வளவு மிஸ் பண்ணுறீங்கன்னு” அவங்களும் தயங்கி தயங்கி உண்மையை சொல்லுவாங்க பார்க்க கஷ்டமா தான் இருக்கும். 

பெண்கள் நாட்டின் கண்கள் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் மாத்திரம் தான் என்பதை அவர்கள் என்றோ புரிந்து கொண்டார்கள்.

நல்ல ஒரு வசனம் முதல்ல விதவை ஒருத்தி வெள்ளை புடவை கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுல இருந்து நிலவுக்கு போறதுக்கு முன்னால வரைக்கும் எல்லாரும் சொன்ன ஒரு வார்த்தை அது எல்லாம் எப்படி சாத்தியம்னு தான். 

அப்படியே டைரைக்கடர் முகத்த காட்ட அந்த கதையை அதோட முடிச்சிட்டு நான் ஒரு லெஸ்பியன் என்பதை ஒரு பெண் படிப்பறிவு இல்லாத தனது தாய் தந்தையரிடம் சொல்லும் காட்சி. பார்க்க வேடிக்கையா இருந்துச்சி

காலம் எவ்வளவு மாறிடிச்சி பாலுறவுகள்உடலுறவுகள் எத்தனை விதமாகிடிச்சி என்பது போல இருந்தது. கடைசியா ட்விஸ்ட்டு இருக்கு ஒண்ணு இல்லை வரிசையா கண்டிப்பா எல்லாரும் படத்தை பாருங்க. அந்த ஸ்வாரஸ்யம் அப்போ தான் நல்லாயிருக்கும்.

இன்னமும் பஸ்ட் ஆப் கூட முடியல அப்புறமா மூணாவது கதை ஆரம்பமே கதாநாயகனுக்காக காதலி நல்ல சம்பளத்துக்கு கேரளாவிற்கு கிடைக்கிற டிரான்ஸ்பர் வேண்டாம்னு சொல்லுறாங்க.

ஆனா ஹீரோ பாத்ரூம்ல மாஸ்டபெட்ஸ் பண்ணி தெரியாம மாத்தி பிக்ஸ் பண்ண சிசிடிவி ல மாட்டிக்கிறாரு. அவரு வேலையும் போய்டுது.

அந்த கீரோ கால்பாய் ஆகிடுறாரு பணத்துக்காக, அவன் லவ்வர் இத பத்தி ஒரு ஆர்ட்டிக்கல் எழுத அவன எதேர்ச்சையா பார்க்க அது இரண்டு பேரயும் பிரேக் பண்ணுற அளவு போகுது எல்லாம் ஆணாதிக்கம் என்ற தலைப்பு கீழ் தான் வருகிறது. எதுனாலும் ஆம்பள பண்ணா தப்பு இல்லை பொண்ணு பண்ணா தப்பு…

அடுத்து நான்காவது கதை இப்படி வரிசையாகா கதையின் பின் கதை என்று எல்லாம் பெண்கள் தனித்தன்மையை மையமாக கொண்டு காட்சிபடுத்தப் பட்டுள்ளது. 

படம் சரியாகா தியேட்டரில் ஓடாதா போது இயக்குனர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ஒரு முறை வந்து பாருங்கள் உங்களுக்கு படம் பிடிக்கவில்லையென்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள் என்று கூறியிருப்பார்.

அவ்வளவு நம்பிக்கை அவர் கதையின் மீது. நான்காவது கதை இன்றைய டிவி சேனல்களில் நடக்கும் குழந்தைகள் ரியாலிட்டி சோவை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள். 

எதார்த்தமானா கருத்துக்களாக இருந்த போதிலும் இதை இனி மாற்ற முடியாது என்பது தான் உண்மை. உலகம் மாற்றத்தின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளது மாற்றம் மட்டுமே மாறாதது. 







Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...